Header Ads



துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணம்


அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் துப்பாக்கியுடன் ஹூங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 


ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

No comments

Powered by Blogger.