இப்ராஹிமுக்கு எதிராக இனவாதத்தை கக்கியுள்ள வீரவன்ச
அமெரிக்க எப்பிஐ நிறுவனம், ஈஸ்டர் தாக்குதலுக்கு மூலதன உதவி செய்தவர் இப்ராஹிம் என்ற வர்த்தகர் என குறிப்பிட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் போது அவரின் மகன்கள் இருவர் மற்றும் மருமகள் தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இப்ராஹிம் சுதந்திரமாக நாட்டில் இருக்கிறார். குறித்த நபர் ஒரு காலத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியபட்டியலிலும் இடம்பெற்றிருந்தமை அனைவரும் அறிந்ததாகும்.
இப்ராஹிம் தொடர்பில் முன்னாள் குற்றபுலனாய்வு அதிகாரி நிலந்த ஜயவர்த்தன பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் வழங்கியும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அந்த அதிகாரி ஓய்வோதியம் கூட இல்லாமல் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளார். ஆனால் தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்தும் அறிவிக்காமல் இருந்தவர்கள் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர் என இன்று (15) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவர் ஊடகங்களுக்கு கருத்து குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment