Header Ads



சிறைச்சாலையில் அரசியல்வாதிகளின் நிலை


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சிறைச்சாலை மருத்துவர், ராஜிதவை பரிசோதித்த போது, ​​அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் இல்லை என்பது தெரியவந்தது.


அதற்கமைய, முன்னாள் அமைச்சர் விளக்கமறியல் சிறைச்சாலையின் N பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருடன் சுமார் 14 கைதிகள் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவும் மகசீன் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 10 கைதிகளுடன் M2 பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முஅதுரலியே ரத்தன தேரர், மகசின் சிறைச்சாலையின் G பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த பிரிவில் சுமார் 50 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.