Header Ads



கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் மற்றொரு மைல்கல்


கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலை சுட்டெண் இன்று (15) முதன்முறையாக 20,000 புள்ளிகளைத் கடந்துள்ளது.


வரலாற்றில் மற்றொரு  மைல்கல் இது.


அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 289.69 புள்ளிகள் உயர்ந்து 20,218.36 புள்ளிகளாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 9.54 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதற்கு முன்னர் கொழும்பு பங்குச் சந்தை, கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி 20,000 புள்ளிகளை எட்டியிருந்த போதிலும், அன்றைய தினம் முடிவில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.