400 மில்லியன் ரூபா எங்கே..? என்ன நடந்தது..??
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே? என்ன நடந்தது? இந்த மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment