Header Ads



கத்தோலிக்க ஆயர்கள் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தனர்


கொழும்பு பேராயர்  மெல்கம் ரஞ்சித்  மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.


வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் குறித்து கர்தினால் , ஜனாதிபதிக்கு விளக்கினார்.


மேலும்,  கத்தோலிக்க சபையில் எழுப்பப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

No comments

Powered by Blogger.