Header Ads



காசாவுக்குச் சென்ற மனிதாபிமானக் கப்பலை கைப்பற்றிய இஸ்ரேலிய கமாண்டோக்கள்


காசாவுக்குச் சென்ற மனிதாபிமானக் கப்பலை இஸ்ரேலிய  கமாண்டோக்கள் கைப்பற்றிய பிறகு, அதன் குழுவினர் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


மாட்லீன் கப்பல், காசாவிலிருந்து சுமார் 100 கடல் மைல்கள் (185 கிமீ) தொலைவில் இருந்தபோது நிறுத்தப்பட்டது.  தற்போது இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 ஆர்வலர்களில் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கும் ஒருவர். 


கப்பல் நிறுத்தப்பட்டமையும், அதிலிருந்த ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டமையும் உலகளாவிய கண்டத்தை இஸ்ரேலுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.