Header Ads



உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள பதவிகள்


நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஒரு மாந­கர சபை மேயர், இரண்டு பிரதி மேயர்கள், ஒரு நகர சபை தவி­சாளர் மற்றும் இரண்டு நகர சபை பிரதித் தவி­சா­ளர்கள், இரண்டு பிர­தேச சபை­க­ளுக்­கான தவி­சா­ளர்கள் மற்றும் ஏழு பிர­தேச சபை­களில் பிரதி தவி­சா­ளர்­க­ளா­கவும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் தெரி­வா­கி­யுள்­ளனர்.


தேசிய காங்­கிரஸ் சார்பில் தலா ஒவ்­வொரு மேயர், பிரதி மேயர், பிர­தேச சபை தவி­சாளர் மற்றும் பிரதி பிர­தேச சபை தவி­சா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.


அத்­துடன், முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் ஒரு நகர சபைக்­கான தவி­சா­ளரும் ஒரு பிரதி தவி­சா­ளரும் தெரி­வா­கி­யுள்­ளனர்.


இத­னி­டையே தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒரு மாந­கர பிரதி மேயரும், ஒரு நகர சபை பிரதித் தவி­சாளர், ஒரு பிர­தேச சபை தவி­சாளர் மற்றும் ஆறு பிர­தேச சபை­களில் பிரதித் தவி­சா­ளர்­களும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளன.


28 மாந­கர சபைகள், 36 நகர சபைகள் 275 பிர­தேச சபைகள் உள்­ள­டங்­க­லாக 339 உள்­ளூ­ராட்சி மன்ற அதி­கார சபை­க­ளுக்­கான வாக்­கெ­டுப்பு 2025.05.06 ஆம் திக­தி­யன்று நடை­பெற்­றது. இந்­நி­லையில் 339 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பதவிக் காலம் கடந்த திங்­கட்­கி­ழமை முதல் ஆரம்­ப­மா­கியது.


339 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் 161 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் நிய­ம­னத்தில் சிக்கல் காணப்­ப­டாத நிலையில் குறித்த உள்­ளூ­ராட்சி மன்ற அதி­கார சபை­களின் மாந­கர மேயர், பிரதி மேயர், நக­ர­பிதா, பிரதி நகர பிதா, பிரதேச சபை தவி­சாளர், உப தவி­சா­ளர்­களின் பெயர் விப­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.


தேர்­தல்கள் ஆணைக்­குழு கடந்த சனிக்­கி­ழமை வெளி­யிட்ட 2438/92 ஆம் இலக்க விசேட வர்த்­த­மானி மூலம் இந்த விப­ரங்கள் வெளி­யா­கின.


14 மாந­கர சபை­க­ளுக்­கான மேயர்கள், பிரதி மேயர்கள், 12 நகர சபை­க­ளுக்­கான நகர தவி­சாளர், பிரதித் தவி­சாளர், 135 பிர­தேச சபை­க­ளுக்கான தவி­சாளர் மற்றும் பிரதி தவி­சா­ளர்கள் உள்­ள­டக்­கிய 161 உள்­ளூ­ராட்சி மன்ற அதி­கார சபை­க­ளுக்­கான விப­ரங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.


இந்த விப­ரங்­களின் அடிப்­ப­டையில் ஒரு மாந­கர சபைக்கு முஸ்லிம் பிர­தி­நி­தி­யொ­ருவர் மேய­ரா­கவும் இரண்டு மாந­க­ரங்­களில் பிரதி மேயர் பதவி முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அத்­தோடு, ஒரு நகர சபை தவி­சாளர் மற்றும் இரண்டு நகர சபை­களில் பிரதி தவி­சாளர் பதவிகளுக்கு முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் பெயர்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இத­னி­டையே, ஒரு பிர­தேச சபையின் தவி­சாளர் பத­வியும் ஏழு பிர­தேச சபை­களில் உப தவி­சாளர் பத­வியும் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கு கிடைத்­துள்­ளன.


இதன்­படி அக்­க­ரைப்­பற்று மாந­கர சபையின் மேய­ராக தேசிய காங்­கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் தெரி­வா­கி­யுள்ளார். அத்­தோடு, அக்­க­ரைப்­பற்று மாந­கர சபையின் பிரதி மேய­ராக தே.கா. உறுப்­பினர் உதுமா லெப்பை உவைசின் பெயர் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. மேலும், பொலன்­ன­றுவை மாந­கர சபை பிரதி மேய­ராக தேசிய மக்கள் சக்தி உறுப்­பினர் முஹம்­மது முனாஸ் முஹம்­மது ஹுஸைனின் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


காத்­தான்­குடி நகர சபையின் தவி­சா­ள­ராக சாஹுல் ஹமீது முஹம்­மது அஸ்­பரும் பிரதித் தவிசாளராக முஹம்மத் இப்­றாஹிம் முஹம்மத் ஜெசீம் ஆகியோர் முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி ஊடாக தெரி­வா­கி­யுள்­ளனர். அத்­துடன், தேசிய மக்கள் சக்தி சார்பில் மினு­வாங்கொடை நகர சபையின் பிரதி தவி­சா­ள­ராக துவான் கிச்சில் சுரையா பர்வீன் தெரி­வா­கி­யுள்ளார்.


மேலும் வத்­தளை பிர­தேச சபை தவி­சா­ள­ராக தேசிய மக்கள் சக்தி உறுப்­பினர் பிரிஹான் முஹம்மத் ஆப்­தீனும் அக்­க­ரைப்­பற்று பிர­தேச சபை தவி­சா­ள­ராக தேசிய காங்­கிரஸ் உறுப்­பினர் முஹம்­மது அபூ­பக்கர் ராசிக் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

அக்­க­ரைப்­பற்று பிர­தேச சபை பிரதித் தவி­சா­ள­ராக அப்துல் மனாப் அஸ்ஹர் (தே.கா.), குரு­நாகல் பிர­தேச சபை பிரதித் தவி­சா­ள­ராக அப்துல் ஹாதி நாஷிக் அஹமத் (தே.ம.ச.), பொல்­க­ஹ­வலை பிர­தேச சபை பிரதித் தவி­சா­ள­ராக முஹம்­மது தாஹா முஹம்­மது அக்ரம் (தே.ம.ச.), திரப்­பனே பிர­தேச சபை பிரதித் தவி­சா­ள­ராக அப்துல் காதர் முஹம்­மது நியாஸ் (தே.ம.ச.), பலா­கல பிர­தேச சபை பிரதித் தவி­சா­ள­ராக சாலி முஹம்­மது முஹம்­மது சிராஜ் (தே.ம.ச.), வெலி­மடை பிர­தேச சபை பிரதித் தவி­சா­ள­ராக மூஸா லெப்பை முஹம்­மது சப்வான் (தே.ம.ச.) மற்றும் வெல்­ல­வாய பிர­தேச சபை பிரதித் தவி­சா­ள­ராக முஹம்மத் சுபைர் முஹம்மத் அப்துல் நிசாம் (தே.ம.ச.) ஆகி­யோ­ரது பெயர் விப­ரங்கள் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.


இத­னி­டையே, 161 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான உறுப்­பி­னர்­களின் பெயர்­களை அத்­தாட்­சிப்­ப­டுத்தி 25 நிர்­வாக மாவட்­டங்­க­ளுக்­கு­ரிய வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.


மேலும், ஒரு அர­சியல் கட்­சியோ அல்­லது சுயேச்­சைக் குழுவோ தனித்து பெரும்­பான்­மையை பெற்­றுக்­கொள்­ளாத நிலையில் 178 உள்­ளூ­ராட்சி மன்ற அதி­கார சபை­களின் நிய­ம­னங்­களில் சிக்கல் நிலை காணப்­ப­டு­கி­றது. இதனால் தான் 161 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை மாத்திரம் வரையறுத்து வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


உள்ளுராட்சி மன்ற ஆணையாளரின் தலையீட்டுடன் 178 உள்ளூராட்சி மன்ற அதிகாரசபைகளுக்கான நியமனங்கள் வெவ்வேறு தினங்களில் இடம்பெறவுள்ளன. இந்த நியமனங்களுக்கான வர்த்தமானி அறிவித்தலை விடயதானத்துக்கு பொறுப்பான பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பிரசுரிப்பார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.- Vidivelli

No comments

Powered by Blogger.