அக்குரணை பிரதேச சபையை SJB கைப்பற்றியதாக அறிவிப்பு
கண்டி - அக்குரணை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தையும், தவிசாளர் பதவியையும், SJB தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது.
இன்றைய தினம் (12) அக்குரணை பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான இஸ்திஹார் இமாதுதீன் தவிசாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். SJB ஊடகப் பிரிவினரால் Jaffna Muslim இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல் இது.
SJB ஊடகப் பிரிவினரால் Jaffna Muslim இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல் இது
Post a Comment