Header Ads



ஓட்டமாவடி விபத்தில் 12 பேர் காயம்


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -


ஓட்டமாவடி தியாவட்டுவான் பகுதியில் இன்று  ( 10.06.2025) இடம் பெற்ற வாகன விபத்தில் பணிரெண்டு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.


வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் விமான நிலையம் சென்று திரும்பி ஊருக்கு வரும் வழியிலயே இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.


இந்த விபத்தினால் வேனில் நான்கு பெண்கள் இரண்டு குழந்தைகள் உள்ளடங்களாக பயணித்த  பணிரெண்டு பேரும் காயமடைந்துள்ளதுடன் அனைவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.