Header Ads



ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன், பேருந்தின் சில்லில் சிக்கி 3 பலி


பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட நெதுச தத்சர பெர்னாண்டோ என்ற 3 வயது சிறுவன் பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளான்.


இன்று (30) சிறுவனின் சித்தியின் மகளுக்கு காது குத்தும் நிகழ்விற்காக மாலமுல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்றிருந்தனர். உயிரிழந்த சிறுவன், ஒரு பெண் குழந்தை மற்றும் 10 வயது சிறுவன் ஆகியோர் பயணித்துள்ளனர்.


பயணிகள் இறங்குவதற்காக பாணந்துறையின் ருக்கஹ பகுதியில் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​பின்னால் வந்த ஒரு லொறி பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அந்நேரத்தில், பேருந்தின் முன்னால் வந்த முச்சக்கர வண்டி பிரேக்கை இயக்கியதால், முச்சக்கர வண்டியில் இருந்த சிறுவன் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டு பேருந்தின் அடியில் சிக்கியுள்ளான்.


விபத்தை அறியாத பேருந்தின் சாரதி பேருந்தை முன்னோக்கி செலுத்தியுள்ளார். இதன்போது, பேருந்தின் சில்லில் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.