ஜனாஸா விடயத்தில் 2 சமூகங்கள் நடந்துகொண்ட விதம்
ஒரேநாட்டில், ஒரேநாளில் ஜனாஸா விடயத்தில் இரண்டு சமூகங்கள் நடந்துகொண்ட விதம்.....
கடந்த 12.05.2025 களுபோவில வைத்தியசாலையில் ஒரு ஜனாஸா. மார்க்கத்துக்கு பெயர்பெற்ற ஒரு முஸ்லிம் ஊரில் இருந்து தகவல் கிடைக்கிறது. "டோக்டர் திடீர் மையத்து ஒன்று. இன்றைக்கு வெஸக்நாள் .
எப்படியாவது அவசரமாக மையத்த எடுக்க ஒதவி செய்யுங்க. "
சரி... நான் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன் என்று கூறிவிட்டு உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டேன்.
எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு காலை 11.00 மணியளவில் ஜனாஸாவை பெற்றுக்கொள்ளலாம் என தகவல் கொடுத்தேன்.
அதற்குள்ளாக குறித்த மையித்தின் சொந்தங்களும் நண்பர்களும் ஊரவர்களும் களுபோவில வைத்திய சாலைக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
வந்தவர்கள் முந்திரிக் கொட்டைபோல் முந்திக்கொண்டு மையித்தை எடுக்க " டீன்" என்ற டீலரை நாடியுள்ளனர்.
அவனோ இந்த விடயத்தில் அந்த ஏரியாவில் பக்காப் பேர்வழி. இதுதான் சந்தர்ப்பம் என மையித்தை மோச்சரியிலிருந்து வெளியே எடுக்க , வெட்ட , பஞ்சு அடைக்க, மீண்டும் தைக்க, மையித்தை வெளியே எடுக்க என 40000 ரூபாவை சுழையாக கழட்டியுள்ளான்.
11.00 மணியளவில் கோல் எடுத்து மையத்து விடயங்கள் எல்லாம் சரிதானே என்று கேட்டபோது தான் இடையில் வந்த மூதேவி ஒன்று 40000 ரூபாவை அபேஸ் பன்னியது தெரிந்தது.
" 40000 ருபா போனாலும் பரவாயில்லை நேரத்துக்கு மையத்து கிடைத்தே" என்று பெருமை வேறு.
எனக்கு வந்த கோபத்துக்கு.... ஏமாலிப்பயல்களுக்கு என்னத்தைச் சொல்ல....!!!!
இவர்களது செயல்களால் வெட்கித் தலை குனிய வேண்டியது நேர்மையான அதிகாரிகள்தான்.
அதுல வேறு ஊர்ல வந்து " எந்த அரசாங்கம் வந்தும் வேலை இல்லை. மையத்த எடுக்கவே 40000 போச்சு. எல்லா இடத்திலும் லஞ்சம் தான். இனி எங்கேன் கிலீன் சிரீலங்கா".
உனது ஏமாந்த தனத்துக்கு அடுத்தவனை ஏன்டா பலியாக்குரீங்க?
சம்பவம் -2
அதே நாளில் குருநாகலை போதனா வைத்தியசாலையில் சிங்கள சகோதரர் ஒருவரின் ஜெனாஸா.
முன்னைய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சாந்த பண்டார அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு" டொக்டர் எமது ஊரைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். சடலத்தை எடுக்க உதவி செய்ய முடியுமா?" எனக்கேட்டார்.
சட்ட வைத்திய அதிகாரி என்ற வகையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன்.
மு.ப 10.45 மணியளவில் மூவர் வந்து எவ்வித செலவுமின்றி சடலத்தை எடுத்துச் சென்றனர்.
மேற்படி இரண்டு சம்பவங்களும் எமக்குத் தரும் படிப்பினை என்ன?
வட்டி ஹராம் என வாய்கிழிய கத்துகிறோம்.ஆனால் வெட்கமே இல்லாமல் லஞ்சம் கொடுக்கின்றோம்.
சிங்கள சமூகம் இவ்வாறான விடயங்களுக்கு ஒருபோதும் லஞ்சம் கொடுப்பதில்லை. யாரும் அவர்களிடம் லஞ்சத்தை எதிர்பார்ப்பதும் இல்லை.
ஆனால் எமது சமூகம் குறுக்கு வழியிலேயே காரியம் சாதிக்க பார்க்கிறது. தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுக்கிறது.
இதில் கவலையான விடயம் என்னவென்றால் "
மையத்து விவகார லஞ்சத்துக்கு" ஊர்த்தலமைகள், ஜெனாஸா சங்கங்கள், படித்தவர்கள், பாமரர்கள் என அனைவரும் பச்சைக்கொடி காட்டுவதுதான்.
மையத்து லஞ்சம் பல போது பணத்தையும் தாண்டி மது போத்தல்கள் வரை நீண்டு செல்வது கண்கூடு.
மையத்து லஞ்சம் ஒரு பெரும்பாவம் என்பதனை சமூகத்துக்கு புரிய வைப்பது, சமூக தலைமைகளதும் ஜெம்இயதுல் உலமாவினதும் தலையாய பொறுப்பாகும்.
சட்ட வைத்திய நிபுணர்
Dr.M.S.Siddeeq
Post a Comment