Header Ads



இன்று 30 உதவி லாரிகளை மட்டும், காசா பகுதிக்குள் நுழைய அனுமதித்த இஸ்ரேல்


 நெதன்யாகு மீது அமெரிக்காவும் நட்பு நாடுகளும் அழுத்தம் கொடுத்த பிறகு, இன்று திங்கட்கிழமை (19)  ஆம் திகதி, 30 உதவி லாரிகளை மட்டும் காசா பகுதிக்குள் நுழைய இஸ்ரேல்  அனுமதித்தது.  


காசாவின் முழு மக்களுக்கும் ஒரு நாள் கூட உணவளிக்க 30  லாரிகள் போதுமானதாக இல்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தப் பகுதிக்கு தினமும் குறைந்தது 600 உதவி லாரிகள் தேவை என்று UN கூறியது.


மார்ச் 2 ஆம் தேதி, இஸ்ரேல் அனைத்து காசா கடவைகளையும் மூடிவிட்டு உதவித் தடையை கடுமையாக்கியது, இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவுகளால் 57 குழந்தைகள் இறந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.