Header Ads



ரணில் முன் எதிர்ப்பை வெளியிட்டவர், இன்று சஜித்துடன் சங்கமம்


களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

 

அதன்படி, அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

 

ஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் நியமனம் நேற்று (12) மேற்கொள்ளப்பட்டது.

 

அந்த நேரத்தில், களுத்துறை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் விஜேமான்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை களுத்துறை மாவட்டத் தலைவராக நியமிப்பதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.