Header Ads



2 பார்வைகளையும் இழந்து, குர்ஆனை மனனமிட்டிருந்தவர், நோன்புடன் பயணிக்கையில் உயிரிப்பு


சபீர் ஹாபீழ் இன்று -16- அதிகாலை நோன்பு நோற்று காலை சுபஹ் தொழுகையையும் இமாமாக நின்று தொழுகை நடத்தினார்


அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக


அல் ஹாபிழ் சபீர் காத்தான்குடி ஊர்வீதி நாலாம் குறிச்சி முகைதீன் தைக்கா பள்ளிவாயலில் இமாமாக பல வருடங்கள் கடமையாற்றி வருகின்றார்.


இரண்டு கண்களும் பார்வையற்ற சபீர் ஹாபிழ் இனிமையாக ஓதுபவர்.


இரவு ரமழான் மாதத்தின் 15 வது இரவு.  இரவு நேர தொழுகையையும் நடாத்திவிட்டு இன்று (16) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸஹர் செய்து புனித நோன்பை நோற்றுக் கொண்டு புனித சுபாஹுத் தொழுகையையும் இமாமாக நிறைவேற்றிவிட்டு  மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் இருக்கும் தனது தந்தை  பார்ப்பதற்காக அவரோடு கூட தராவீஹ்  தொழுகையை நடத்துகின்ற ஹாபீழ்  ஏ.ஆர் எம்.ஸிபாக் அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது கல்லடியில் வைத்து  விபத்து இடம் பெற்றுள்ளது.


மோட்டார் சைக்கிளில் பின்னாள்  இருந்து சென்ற சபீர் ஹாபிழ் ஸ்தளத்திலேயே வபாத்தாகியுள்ளார்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


மோட்டார் சைக்கிளை ஒடிச் சென்ற அல் ஹாபிழ் சிபாக் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


இதில் வபாத்தான ஹாபிழ் சபீரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக


பார்வையை இழந்தவராக இருந்த போதிலும் அவரது குர்ஆன் ஓதல் மிகவும் இனிமையானது. 


அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக 


எம் எஸ் எம் நூர்தீன்

16.03.2025

No comments

Powered by Blogger.