நெடுநேரம் வரிசையில், காத்திருந்த அமைச்சர் - இலங்கையில் ஆச்சரியம்
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கண் சிகிச்சைக்காக, புதன்கிழமை (19) சென்றிருந்தார்.
நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அவர் சந்தித்தார். அமைச்சராக இருந்த போதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Post a Comment