Header Ads



உலகின் 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சர்வதேச மாநாடு கொழும்பில்

 
உலகின் 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாபெரும் சர்வதேச மாநாடு இன்னும் சில நாட்களில் கொழும்பில் நடைபெறவுள்ளது.


'Innovation Island Sri Lanka' எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் பெப்ரவரி 20 மற்றும் 21ஆம் திகதிகளில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.


இலங்கையை உலகளாவிய புத்தாக்க கேந்திரமாக மாற்றும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த மாநாட்டில் 50 நாடுகளின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள உயர்மட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

No comments

Powered by Blogger.