Header Ads



காலி சிறைச்சாலைக்குள் மோதல் - நிலைமையைக் கட்டுப்படுத்த STF களமிறக்கம்


காலி சிறைச்சாலையில் இன்று (26) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார்.


இந்நிலையில், காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் தற்போது வரவழைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.