Header Ads



ஜப்பானில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை, இலங்கையில் குறைவான விலையில் விற்பனை செய்ய முடியுமா..?


ஜப்பானில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, தற்போதைய விலையை விட குறைவான விலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதனை ஒரு யோசனையாக அரசாங்கத்திடம் முன்வைப்பதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் மூத்த ஆலோசகர் ஜகன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.


இலங்கையில் வாகன இறக்குமதியானது 5 வருடங்களுக்கு பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக ஜகன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஜப்பானில் 4 அல்லது 5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அரசாங்கம் இறக்குமதி செய்யும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறு இறக்குமதி செய்வதன் மூலம்  இலங்கை மக்களுக்கு குறைவான விலையில் வாகனங்கள் பெற்றுக்கொடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.