Header Ads



லஞ்சத்திற்கு எதிராக NPP யின் நடவடிக்கை - 9 மில்லியன் இலஞ்சம் பெற்ற 2 பேர் சிக்கினர்


கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


காணிக்கான நட்டஈடு வழங்குவது தொடர்பான செயற்பாட்டுக்கு 09 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெறும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.


நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்ட தனது உறவினரின் காணிக்கான நட்டஈட்டை துரிதப்படுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் மற்றுமொரு வர்த்தகரிடம் இருந்து இந்த இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.


சமகால அரசாங்கத்தில் லஞ்சம் பெறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.