Header Ads



2 துறைகள் முதன்முறையாக ஒரே அமைச்சின் கீழ் - விஜித ஹேரத் மகிழ்ச்சி


சுற்றுலா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் ஆகிய துறைகள் முதன்முறையாக ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


கொழும்பு 7 இல் உள்ள ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் இன்று (08) ஆம் திகதி ஆரம்பமான '2024 சர்வதேச பஜார் மற்றும் கலாசார விழா'வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பல சாவடிகளும் இந்த விழாவில் சேர்க்கப்பட்டுள்ளன.


மேலும் தூதர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேஷன் ஷோவும் ஒன்றும் நடைபெற்றது.


அங்கு உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத்,


“இதன் மூலம் எமக்கு கிடைக்கும் நிதியானது கொழும்பு வடக்கு ராகமவில் உள்ள கல்லீரல் நோய்களுக்கான எம்.எச்.ஓமர் கல்லீரல் பராமரிப்பு நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். இலங்கைக்கு பிரத்தியேகமான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். முதன்முறையாக சுற்றுலா மற்றும் வெளியுறவுத் துறைகளை ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியும். இராஜதந்திர மற்றும் சர்வதேச நிறுவனங்களின் உறுப்பினர்களால் திருப்தியுடன் காட்சிப்படுத்தப்படும் இந்த பேஷன் ஷோவின் மூலம் இலங்கையின் ஆடைத் துறையின் நிலைத்தன்மை நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது."

No comments

Powered by Blogger.