Header Ads



சுதந்திர நாட்டுக்காக சவூதி இளவரசரையும், ஜோர்தான் மன்னரையும் வேண்டுவோம்..!


என்னப்பா நடக்குது மத்திய கிழக்கில்..? 


இஸ்ரேல் - ஈரான் சண்டையில், இஸ்ரேலுக்கு தான்  உதவுவதாக சவூதி அராபியா கூறுகிறது. 


இதற்கு முன் ஜோர்தானும் அப்படியே கூறிவிட்டது. 


இஸ்ரேலை நோக்கி வந்த ஈரானின் எறிகணை, ட்ரோன்கள் 99% இஸ்ரேலை தாக்கலையாம்.


சவூதி, ஜோர்தான் வான்வெளி மேலாக வந்த எறிகணைகளை அந்நாடுகள் தடுத்து வீழ்த்தி விட்டன.  


அமெரிக்கா பிள்ளையார் சுழி போட்ட வியூகமான  "யூஎஸ்-யூகே-இஸ்ரேல்-சவூதி-ஜோர்தன் இராணுவ கூட்டமைப்பு" நன்றாக வேலை செய்யுது!


சரி, நடந்தது நடந்ததுதான்!


குறைந்த பட்சம், "இரண்டு நாடுகள்" கொள்கையின் படி  பலஸ்தீனத்துக்கு சுதந்திர நாடு ஒன்றையாவது, தம் யூஎஸ்-யூகே-இஸ்ரேல் பெரியண்ணன்களிடம் பேசி, வாங்கி தர சவூதி இளவரசர் Mohammed bin Salman, ஜோர்தன் மன்னர் Abdullah II ஆகியோரை வேண்டுவோம்.


அப்படியாவது நியாயம் நிலை பெற்று அந்த  காசா அப்பாவி  படுகொலைகள் நிற்கட்டும்!

மனோகணேசன் 

16-April-2K24

No comments

Powered by Blogger.