Header Ads



பாலிதவின் மரணம் - மக்கள் அதிர்ச்சி, குவியும் அனுதாபங்கள்


முன்னாள்‌ இராஜாங்க அமைச்சர் பாலித தெவரபெரும மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார் வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.


பாலித தெவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார்.


சமூக சேவை விவகாரங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பாலித தெவரபெருமவின் மரணம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சமூக ஊடகங்களில் பலரும் அவரது மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.