Header Ads



நெதன்யாகு அரசாங்கம் இனி இருக்காது என கடும் போக்கு அமைச்சர்கள் எச்சரிக்கை


தற்போது ஹமாஸால் பரிசீலிக்கப்பட்டு வரும் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேலிய அமைச்சர்கள் எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


கடும் போக்கு அமைச்சர்கள் இடாமர் பென் க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் ஹமாஸ் தரப்புடன் போர் நிறுத்தம் செய்வதை கடுமையாக எதிர்க்கின்றனர்.


ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இராணுவம் ரஃபாவிற்குள் செல்லவில்லை என்றால் நெதன்யாகு அரசாங்கம் இனி இருக்காது  என அந்த 2 அமைச்சர்களும் எச்சரித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.