Header Ads



புலிகளுக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் வித்தியாசம் கிடையாது


புலிகள் அமைப்பிற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.


கண்டியில் நேற்றைய தினம் (11.04.2024) ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியை மறுசீரமைத்து தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றியடைய செய்வதே எமது எதிர்பார்ப்பாகும். நாட்டின் இறைமை கலாசாரம் நாட்டு மக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கி செல்வோம்.


தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் நாட்டிற்கு தற்போது தேவைப்படுகின்றது. பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் என்ற ரீதியில் பொதுஜன பெரமுன சார்பில் பொருத்தமான ஒருவரை நாம் தெரிவு செய்வோம்.


மக்கள் நம்பிக்கையை வெற்றி கொண்ட ஒருவரே பொதுஜன பெரமுனுவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார். கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் எனக்கு பாரிய பொறுப்பு உள்ளது.


எனவே கட்சியை கட்டியெழுப்பவுதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினையே முன்னெடுத்துள்ளேன். தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசமில்லை.


நாம் இந்த நாட்டை வீணடிக்கவில்லை. பேருந்துக்கு நாம் தீவைக்கவில்லை. அப்பாவி மக்கள் மீதும் பௌத்த மதகுருமார் மீதும் நாம் தாக்குதல் மேற்கொள்ளவில்லை.


இவ்வாறான சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசமில்லை என்றே தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. தேர்தல் வேலைகளுக்கு ஒவ்வொரு வீடு வீடாக வருமாறு இந்த நபருக்கு இந்த நாட்டு பொதுமக்கள் அழைக்கின்றார்கள். வரவேற்புக் கருவிகளான ஏற்கனவே பல்வேறு வகையான தும்புத்தடிகள் தயார் நிலையில் வைத்திருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.