Header Ads



நாட்டில் கையடக்கத் தொலைபேசி விலைகளில் வீழ்ச்சி


டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை 18% - 20% வரை குறைந்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்தார்.


தற்போது டொலர் 300 ரூபா வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 


சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஐபோன் 15 pro max 515,000 முதல் 530,000 ரூபா வரை காணப்பட்ட விலை தற்போது 375000 ரூபா வரை குறைவடைந்துள்ளது. 


அதேபோல், குறைந்த விலையுடைய கைப்பேசிகளின் விலையும் 18 - 20 சதவீதம் வரையில் குறைவடைந்துள்ளதை காணக்கூடியதாய் உள்ளது. 


10,000 ரூபா வரை அதிகரித்திருந்த கைப்பேசியை தற்போது 7,000 ரூபாக்கு பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.