Header Ads



சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன், கடும் பதற்ற நிலைமை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் கட்சியின் அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.


இதனையடுத்தே இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அங்கு பொலிஸார்  பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.