Header Ads



வவுனியாவில் இருந்து, பாலஸ்தீன உறவுகளுக்கு நிதி


வவுனியாவில் இருந்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக பாலஸ்தீன உறவுகளுக்கான நிதியத்திற்கு ஒன்றரை மில்லியன் ரூபாய் பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.


குறித்த நிதியானது, வவுனியா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஏற்பாட்டில் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, பாலஸ்தீன உறவுகளுக்கான நிதியத்தின் இலங்கை வங்கி கணக்கிலக்கத்திற்கு குறித்த அமைப்பினர் நிதியை வைப்பு செய்துள்ளனர்.   


கடந்த மாதம் 22ஆம் திகதி முதல் கடந்த திங்கட்கிழமை வரை வவுனியா பிரதேசத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் சகோதரத்துவ உணர்வோடு சேகரித்த 150,0552 ரூபாய் பணம் அன்பளிப்பாக இதன்போது வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.