Header Ads



மண் மூட்டையாலும், கயிறாலும் கட்டப்பட்ட ஜனாஸா மீட்பு


மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் -பஹ்ரியா நகர் கலப்புக் கடலில் உயிரிழிந்து மிதந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சடலமானது இன்று(01.04.2024) மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் கூறியுள்ளனர்.


மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹமீது நப்ரீஸ் (வயது 39) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இதன்போது சடலமாக மீட்கப்பட்டவரின் கை,கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு வைற்றில் மண் மூட்டையும் கட்டப்பட்டு காணப்பட்டுள்ளமையினால் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இதனையடுத்து மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் இன்று பகல் குறித்த இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.