Header Ads



காஸாவுக்கு நிதி பங்களிப்புச் செய்வதற்கான, கால எல்லை மே 31 வரை நீடிப்பு


காஸா  மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund)  பங்களிப்புச் செய்வதற்கான காலஎல்லை 2024 மே 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 


இதற்குப் பங்களிக்க விரும்பும் நன்கொடையாளர்களுக்கு குறித்த திகதிக்கு முன்னர் தமது அன்பளிப்பை இலங்கை வங்கி தப்ரோபன் கிளையில் (747)   7040016 எனும் வங்கிக் கணக்கில்    வைப்பு செய்து பற்றுச்சீட்டை  077-9730396 என்ற எண்ணுக்கு WhatsApp  ஊடாக அனுப்புமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


- PMD -


No comments

Powered by Blogger.