Header Ads



1,978 பயணிகள், 906 பணிக்குழாமினருடன் இலங்கை வந்துள்ள சொகுசுக் கப்பல்


இத்தாலி நாட்டுக்கு சொந்தமான கொஸ்டா டெலிசியோசா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.


குறித்த கப்பலில் குறித்த கப்பலில் 1,978 பயணிகளும், 906 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த கப்பல் ஊடாக பிரித்தானியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா  ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று(15.04.2024)வருகை தந்துள்ளனர்.


அவர்கள் காலி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலாவில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த பயணிகள் கப்பல் மாலைதீவு நோக்கி செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.