Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளமின்றி வாழ முடியும் என அறிவிப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் இன்றி வாழ முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.


சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 


தாம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், கொடுப்பனவுகள் இன்றி வாழ்க்கையை முன்னெடுக்கத் தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பொதுமக்கள் பிரதிநிதியாக தெரிவாவதற்கு முன்னதாக வாழ்ந்த வாழ்க்கையைப் போன்றே வாழ முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையிடாது, யாருக்கும் பிரச்சினையின்றி தங்களது பிள்ளைகளை தனியார் பல்கலைக்கழகங்களில் கற்பிப்பதில் தவறில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.