Header Ads



இலங்கையின் ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும் -


நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கையின் ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லத்தின் பொதுச் செயலாளர் அருட்தந்தை ஜே.டி.அந்தோனி ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.


பெரிய வெள்ளி தினத்திற்காக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


அத்துடன், நாடு கடுமையான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில் நாளை பெரிய வெள்ளி கொண்டாடப்படவுள்ளது. 


மக்களின் துன்பங்களைக் குறைக்க நாட்டின் ஆட்சி அமைப்பில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், இது அனைத்து குடிமக்களின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று ஐந்து ஆண்டுகளை அண்மித்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் பொதுச் செயலாளர் அருட்தந்தை ஜே.டி.அந்தோனி ஜெயக்கொடி விசனம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.