Header Ads



வீணாகிய 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான எரிபொருள்


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் இன்று (22) காலை 4.30 மணியளவில் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது ஏற்றிவந்த எரிபொருள் அனைத்தும் வீதியில் ஊற்றி நாசமாகியிருந்ததுடன் ஏ9வீதி ஊடான போக்குவரத்தும் சிறிது நேரம் தடைப்பட்டது.


மேற்படி எரிபொருள் பவுசர் பஸ் ஒன்றுடன் விபத்துக்குள்ளாக முற்பட்ட வேளையிலேயே அதனைத் தவிர்க்க பவுசர் சாரதி முற்பட்ட வேளையில் பவுசர் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.


இதன்போது 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான எரிபொருள் வீணாகிப்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


சாவகச்சேரி விசேட நிருபர்

No comments

Powered by Blogger.