Header Ads



இஸ்ரேலிய அரசாங்கம் செய்வது போர் அல்ல, இனப்படுகொலை


"இஸ்ரேலிய அரசாங்கம் செய்வது போர் அல்ல, இனப்படுகொலை. அவர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்கிறார்கள்."

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் பிரேசில் ஐனாதிபதி. இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

"சிறையிலிருந்து வெளிவருவதற்கான எந்த ஒப்பந்தத்தையும் நான் ஏற்கமாட்டேன் என்றும், எனது சுதந்திரத்தை என் கண்ணியத்திற்காக மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றும் நான் சிறையில் இருந்தபோது சொன்னது போலவே, நான் சொல்கிறேன்: நான் என் மானத்தை பொய்யாக மாற்ற மாட்டேன்.


நான் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை உருவாக்குவதற்கு ஆதரவாக இருக்கிறேன். இந்த பாலஸ்தீன அரசு இஸ்ரேல் நாட்டுடன் இணக்கமாக வாழட்டும்.


இஸ்ரேல் அரசு செய்வது போர் அல்ல, இனப்படுகொலை. குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்கிறார்கள்.


நான் அளித்த பேட்டியை விளக்க முயற்சிக்காதீர்கள். நேர்காணலைப் படித்துவிட்டு, இஸ்ரேல் பிரதமர் கூறியதை வைத்து என்னை மதிப்பிடுவதை நிறுத்துங்கள்" - என்றார்.

No comments

Powered by Blogger.