Header Ads



தன்னைக் கடித்த எலியைத் தானே கடித்து கொன்ற மாணவி - அதன்பின் நடந்த விபரீதம்


சீனாவில் தன்னுடைய விரலைக் கடித்த எலியை பழிவாங்குவதற்காக, அதனை திரும்ப கடித்துள்ளார் பல்கலைக்கழக மாணவி.


சீசீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வூசிச் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவி ஒருவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.


இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவியின் விரலில் எலி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியில் துடித்த அந்த மாணவி ஆத்திரத்தில் அந்த எலியை பழிவாங்க நினைத்துள்ளார்.


இதனால் உடனடியாக தன்னை கடித்த எலியை பிடித்து கடித்து வைத்துள்ளார். அந்த மாணவி கடித்ததில் அந்த எலி உயிரிழந்தது.


எலி கடித்ததில் காயம் அடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய இந்தச் செயலைக் கண்டு வைத்தியர்களே அதிர்ச்சியடைந்தார். எனினும், அவருக்கு உடனே ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.