Header Ads



மீன்பிடித்துக் கொண்டிருந்தவரின் வலையில் சிக்கிய சடலம்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பு வாவியில் நேற்றிரவு 8 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் சிக்கி ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லேடி மேனிங்க் ட்ரைவிலுள்ள வாவியில் குறித்த வாவிக்கு முன்னாலுள்ள வீட்டில் வசிக்கும் நபர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவரது வலையில் குறித்த சடலம் சிக்கியுள்ளது.


குறித்த சடலம் குறித்து மட்டக்களப்பு தலைமையக பொலிசாருக்கு அறிவித்தையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.


குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.


மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.