இஸ்ரேல் தொடர்பில் ஈரான் ஜனாதிபதியின் வேண்டுகோள்
காசாவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியது குறித்து 'சிறப்பு சர்வதேச விசாரணை' வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, பிரிக்ஸ் மாநாட்டில் தனது உரையின் போது அழைப்பு விடுத்தார்.
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய அட்டூழியங்கள் மேற்குலகின் தார்மீக சரிவைக் காட்டுவதாக அவர் கூறினார்.
“காசாவில் பாலஸ்தீனத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட முன்னெப்போதும் இல்லாத வன்முறை மற்றும் குற்றச்செயல்களை நாம் நேரில் காணும்போது, இன்று முழு உலகமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நாட்களில் காஸாவில் என்ன நடக்கிறது என்பது மேற்கத்திய சர்வதேச அமைப்பின் அநீதியை தெளிவாக வெளிப்படுத்துகிறது. காஸா விவகாரம் மனிதாபிமானம் மற்றும் நீதி சம்பந்தப்பட்டது,'' என்றார்.
இஸ்ரேலும் அதன் ஆதரவாளர்களும் மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல், தவறான தகவல்களை வழங்குவதன் மூலம் உலகப் பொதுக் கருத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர் என்று ரைசி வாதிட்டார்.

Post a Comment