Header Ads



எம்முடன் இதுவரை கலந்துரையாடவில்லை, பொறுமையாக பதிலளிப்போம் - மகிந்த


 வரவு செலவு திட்டத்தில் ஆதரவளிக்கக்கூடிய நல்ல விடயங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தமது கட்சியின் கருத்துகள் குறித்து இதுவரை கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


உடனடியாக எதனையும் கூறிவிட முடியாது. பொறுமையாக பதிலளிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.