’முன்னாள் ஜனாதிபதிகளை தடுக்க வேண்டும்’
முன்னாள் ஜனாதிபதிகள் பாராளுமன்றத்திற்கு மீண்டும் வருவதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தவறான முன்னுதாரணமாகும் என்றார்.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தனவும் சந்திரிகா குமாரதுங்கவும் அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரவில்லை என்றும் தமது மானத்தைக் காப்பாற்றியதாகவும் ஜயசேகர
தெரிவித்தார்.
அடுத்த வருட பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்றத்திற்கு வருவாரா என்பது தெரியவில்லை எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment