Header Ads



யாழ்ப்பாண இளைஞனின் சடலம் வௌ்ளவத்தையில் மீட்பு


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் (வயது 28) இளைஞன்   உயிரிழந்த நிலையில் வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விளைஞனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை (05) மீட்கப்பட்டது.  


உயிரிழந்தவரின் உடலில் சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.