Header Ads



பரிப்புவா பிடிபட்டான்


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தெமட்டகொட சமிந்தவுக்கு நெருக்கமான பரிப்புவா எனப்படும் மானவடுகே அசங்க மதுரங்க, வெல்லம்பிட்டி கொட்டுவில பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 


இந்த சுற்றிவளைப்பில் அவரது நெருங்கிய சகாக்கள் இருவர் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர். 


விசேட அதிரடிப்படை ஸ்ரீ ஜயவர்தனபுர முகாமில் கடமையாற்றும் விசேட ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாய குழுவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சந்தேக நபர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வருபவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படை மேலும் தெரிவித்துள்ளது.


வீரகேசரி

No comments

Powered by Blogger.