Header Ads



தமிழ்நாட்டுக்கு பாடச் சென்றுள்ள மாணவிக்காக இலங்கையில் தீ மிதிப்பு


தமிழ் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கண்டி - புஸ்ஸல்லாவையை சேர்ந்த சிறுமி அசானி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என அப்பிரதேச மக்கள் தீ மிதித்துள்ளனர்.


ராகலை ஸ்ரீ பச்சத்தண்ணி மாரியம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழா பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (16) நடைபெற்ற தீ மிதிப்பு நிகழ்வுகளில் மலையக சிறுமி அசானிக்காக அப்பிரதேச மக்கள் தீ மிதிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கும் ஸ்ரீ பச்சத்தண்ணி மாரியம்மன் ஆலயத்திற்கு இன, ஜாதி,மத பேதமின்றி அனைவரும் வந்து வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.


இதேவேளை, அசானிக்கு அங்கீகாரம் வழங்கிய zee தமிழ் தொலைக்காட்சிக்கு அப்பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.