Header Ads



2 மாணவர்கள் வபாத்


வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் பாதுகாப்பற்ற நீர்நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.


இன்று (17) எல்லே போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு இந்த மாணவர்கள் சென்றிருந்த நிலையில், அந்த போட்டியின் பின்னர் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


14 மற்றும் 15 வயதுடைய மாணவர்களே மைதானத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற நீர்நிலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.



No comments

Powered by Blogger.