Header Ads



வகுப்பு ஆசிரியரால் பாலியல் வன்புணர்விற்குள்ளான மாணவி


பாடசாலை மாணவியொருவர் சில மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்டுபத பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வகுப்பு ஆசிரியரால் பாலியல் வன்புணர்விற்கு ஆளானதன் காரணமாகவே குறித்த மாணவி இவ்வாறான தவறான முடிவை எடுத்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று (05.08.2023) இடம்பெற்றதாக கட்டுபத பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொஸ்தெனிய, சியம்பலாவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடந்த மாதம் 23ம் திகதி வகுப்பு ஆசிரியர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து மாத்திரை உட்கொண்டதாவும் மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், கட்டுபத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதேவேளை குறித்த மாணவி மேலதிக சிகிச்சைக்காக குளியாபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

No comments

Powered by Blogger.