Header Ads



பழைய துணிகளுக்குள் மறைத்து வைத்த, நகைகளை குப்பையில் வீசிய நபர்


யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியிலும், பீதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.


இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இவ்வாறான நிலையில், யாழ்.சாவகச்சேரியில் கொள்ளையர்களுக்கு பயந்து பழைய துணிகளுக்குள் மறைத்து வைத்த 8 பவுண் நகைகளை குடும்பத்தினர் தவறுதலாக குப்பைக்குள் வீசியுள்ளனர்.


இதனையடுத்து சாவகச்சேரி நகரசபை சுகாதாரதுறையினர் அதனை மீட்டுக் குறித்த குடும்பத்தினரிடம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.


முகநூலில் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பதிவிட்டு குறித்த ஊழியருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களை விஷ்ணுகாந் கனகசபை என்பவர் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.