Header Ads



5 வயது குழந்தை மரணம் - என்ன நடந்தது..?


முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் ஐந்து வயது குழந்தையின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 வயதுடைய நபர், குழந்தையின் மரணத்திற்கு காரணமானதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இயந்திரத்தை பயன்படுத்தி புல் அறுத்துக்கொண்டிருந்த வேளையில் தற்செயலாக பிளேட் குழந்தையிடம் பட்டதாக குறித்த நபர் வெளிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இதனால் குழந்தை கீழே விழுந்து காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.


உடைந்த கண்ணாடி மீது விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் குழந்தை இறந்தது போல் காட்சியை அமைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தனது தாத்தா பாட்டியுடன் வசிக்கும் குழந்தை, தனது தாத்தா பராமரிப்பாளராக இருந்த கட்டுமான தளத்தில் பணிபுரியும் குறித்த நபருடன் குழந்தை நேரத்தை செலவிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவத்தன்று தாத்தா வேறொரு பயணத்தை மேற்கொள்ளவிருந்ததால், குறித்த நபரை தங்குமாறு குழந்தை கோரிக்கை விடுத்துள்ளது.


கடந்த வியாழக்கிழமை மாலை ஹல்பராவ பகுதியில் உள்ள கட்டுமானப் பகுதியில் இருந்து வெட்டுக் காயங்களுடன் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.


முல்லேரியா பொலிஸாருக்கு பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக கிடைத்த தகவலையடுத்து, சந்தேகநபரே சடலத்தை கண்டுபிடித்துள்ளார்.


உயிரிழந்த குறித்த சிறுவன் ஹல்பராவ, மாலம்பே பகுதியைச் சேர்ந்த 05 வயதுடையவராவர்.


பெற்றோர் பிரிந்து தாய் வெளிநாட்டில் தொழில் செய்து வருவதால், குழந்தை தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.