4 ரோபோக்கள் துருப்பிடிப்பு - 8 கோடி ரூபா நாசம்
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் 2020 ஆம் ஆண்டு ரோபோட்டிக்ஸ் சிறப்பு மையத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட நான்கு ரோபோ இயந்திரங்கள் குறித்த மையம் செயல்படாததால் துருப்பிடித்து பழுதடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடவுச்சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சில மென்பொருட்களை இயக்க முடியாது என்றும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இம்மையத்தை (இரண்டு வருட காலத்திற்கு) நடத்துவதற்கு பணியமர்த்தப்பட்டுள்ள நிர்வாக அதிகாரிக்கு மாதம் ஏழு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாவிற்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment