Header Ads



பாகிஸ்தானின் ஆபாச வீடியோ Call வலையில் சிக்கிய இந்திய விஞ்ஞானி, ராணுவ ரகசியங்களை உளவு கூறியதாக கைது


மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ.) மூத்த விஞ்ஞானியாக இருப்பவர் பிரதீப் குருல்கர். இவர் ராணுவ ரகசியங்களை செல்போன் மூலம் மர்மநபரிடம் பகிர்ந்து வருவதாக டி.ஆர்.டி.ஒ. ஊழியர் ஒருவர் மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.


அப்போது விஞ்ஞானி நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பின் ஏஜெண்டுக்கு கசிய விட்டது தெரியவந்தது. அவர் வாட்ஸ்அப் கால், வீடியோ கால், வாய்ஸ் மெசேஜ் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு இந்திய பாதுகாப்பு ரகசியங்களை தெரிவித்து உள்ளார்.


இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்து உள்ளனர். மேலும் இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரகசியங்கள் எதிரி நாட்டுக்கு தெரிந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை தெரிந்தும் விஞ்ஞானி அவரது பதவியை தவறாக பயன்படுத்தி ராணுவ ரகசியங்களை எதிரி நாட்டுக்கு கொடுத்து உள்ளார்" என்றார்.


போலீசார் விஞ்ஞானியின் செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களை பறிமுதல் செய்து உள்ளனர். அவர் என்னென்ன தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்து உள்ளார் என ஆய்வு செய்து வருகின்றனர்


 விஞ்ஞானி ஆபாச வீடியோ கால் (ஹனி ட்ரப்) வலையில் சிக்கி மிரட்டப்பட்டதால் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பணப்பலன் எதுவும் பெற்றாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.