முள்ளிவாய்க்காலில் ஒரு, ஆசிரியையின் முன்மாதிரி பணி
இந்நிலையில் அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும், பிள்ளைகள் மீதான அவருடைய அக்கறையும் பலரையும் ஆச்சரியப்பட வைத்தாக முகநூல் வாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது , குறித்த ஆசிரியை தன்னிடம் கற்கும் முப்பது பிள்ளைகளின் பெற்றோரிடமும் சின்னதாக "கடைக்கொப்பி" சைஸில் ஒரு ரெக்கோர்ட் புக் கொடுத்திருக்கிறார்.
அந்த ரெக்கோர்டில், பிள்ளை அன்றிரவு சுயகற்றல் செய்த நேரத்தை நேர்மையோடு பதிவு செய்து கையெழுத்து வைத்து கொடுத்து விட வேண்டும் என்பது.
எழுமாற்றாக ஐந்தாம் வகுப்பு பிள்ளை ஒருவரின் இந்த ரெக்கோர்டை பார்த்த போது சந்தோசமாக இருந்தது. முக்கியமாக, ஆசிரியையின் குறிப்பும் அவர் வரைந்த சிரித்த முகமும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றாட வேலைகள் செய்துவரும் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் நன்றாக படித்து வரவேண்டும் என்பதற்காக பல கஸ்ரங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு கல்வியை கொடுக்க பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் குறித்த ஆசிரியை போல தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மீது காட்டும் அன்பும் அக்கறையும் தான் நாளை அந்த மாணவர்கள் எம் சமூகத்தில் தலைசிறந்து வாழ் வழிஅமைக்கின்றது.
Post a Comment